நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 12 மே, 2017

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்திற்குத் திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் விருது!



திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் குறும்படங்கள், ஆவணப்படங்களுக்கு விருது வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்துகின்றது. அந்த வகையில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை .சுந்தரேசனார் ஆவணப்படத்திற்கு இந்த ஆண்டு  விருது வழங்கிப் பாராட்டுகின்றது.  14.05.2017 (ஞாயிறு) காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருது வழங்கப்பட உள்ளது. குறும்பட இயக்குநர்கள், பெண் எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வு படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் அரிய நிகழ்வாக அமையும்.

கவிஞர் இந்திரன், கவிஞர் சின்னசாமி இ.கா.ப. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

இடம்: மத்திய அரிமா சங்கக் கட்டிடம், காந்திநகர், (திருப்பூர் அவினாசி சாலையில் காந்தி நகர் உள்ளது, சர்வோதயா சங்கம்  பேருந்து நிறுத்தம்) 

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இது ஓர் ஆரம்பமே. மனமார்ந்த வாழ்த்துகள்.