நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 ஜனவரி, 2017

பிரெஞ்சுத் தூதரகத்தில் இரகுநாத் மனே அவர்களுக்குப் பாராட்டு நிகழ்ச்சி!


  புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும், வீணைக் கலைஞரும், திரைப்பட இயக்குநரும் என் நெருங்கிய நண்பருமாகியசெவாலியேஇரகுநாத் மனே அவர்களுக்கு இந்திய அரசு வழங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான  பிரவசி பாரதிய சம்மான் விருதினை’ (Pravasi Bharatiya Samman Award) அண்மையில் அளித்தது(09.01.2017).

     இந்த விருது பெற்ற இரகுநாத் மனே அவர்களுக்குப் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரெஞ்சுத் தூதரகத்தில் 27.01.2019 மாலை பாராட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. பிரெஞ்சுத் துணைத்தூதர், தூதரக அதிகாரிகள், திரைத்துறை, இசைத்துறை, நாட்டியத்துறைக் கலைஞர்கள் கலந்துகொண்டு இரகுநாத் மனே அவர்களைப் பாராட்டி வாழ்த்தினர்நானும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரகுநாத் மனே அவர்களைப் பாராட்டினேன். புதுச்சேரி அரசின் சமூகநலத்துறை அமைச்சர் திரு. கந்தசாமி, திரைத்துறை இயக்குநர் வேலு பிரபாகரன், திரு. சிராஜ், உள்ளிட்டோர் கலந்துகொண்டு இரகுநாத் மனே அவர்களைப் பாராட்டினர்.








கருத்துகள் இல்லை: