நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 12 ஜனவரி, 2017

மூத்த தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் மறைவு!


முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள்

நெல்லை மாவட்டம் தமிழூரில் வாழ்ந்து வந்த பேராசிரியர் .வே.சுப்பிரமணியன் அவர்கள் நேர்ச்சிக்கு உள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். மருத்துவம் பயனளிக்காமல் பேராசிரியர் .வே.சு. அவர்கள் இன்று(12.01.2017) காலை 5 மணியளவில் நெல்லையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியைத் தமிழுலகுக்கு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் .வே.சு. அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், அவர்தம் மாணவர்கள், ஆய்வறிஞர்கள் யாவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

தொடர்புக்கு:  முனைவர் ஆவுடைநாயகம் அவர்கள்  9442615511

பேராசிரியர் அவர்களைப் பற்றி அறிய
இங்கே செல்க
இங்கே செல்க




கருத்துகள் இல்லை: