நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

தஞ்சாவூரில் வெட்டிக்காடு, கீதா கஃபே நூல்கள் வெளியீட்டு விழா




பொறியாளர் சோ. இரவிச்சந்திரன் எழுதிய வெட்டிக்காடு என்ற நூலும் எழுத்தாளர் கீதா இரவிச்சந்திரன் எழுதிய கீதா கஃபே என்ற நூலும் தஞ்சாவூரில் வெளியிடப்பட உள்ளன. சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். தமிழார்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.


நாள்: 18.12. 2016(ஞாயிறு), நேரம்: மாலை 5 மணி

இடம்: ஐசுவர்யா மகால், மருத்துவக் கல்லூரிச் சாலை, இராசப்பா நகர், தஞ்சாவூர்

தலைமை: நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள், நீதிபதி,உயர்நீதி மன்றம், சென்னை

வரவேற்புரை: எழுத்தாளர் எம். எம். அப்துல்லா அவர்கள்

வெட்டிக்காடு நூல் வெளியீடு: எழுத்தாளர் வேல. இராமமூர்த்தி அவர்கள்

முதல்படி பெறுதல்:
திருமதி ஜெயம் சோமு அவர்கள்
திரு. அ. அப்பாவு அவர்கள், மேனாள் கூடுதல் வணிகவரி ஆணையர்

கீதா கஃபே நூல் வெளியீடு: முனைவர் ம.இராசேந்திரன் அவர்கள்
மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

முதல்படி பெறுதல்: 
திருமதி பத்மாவதி தனபாலன் அவர்கள்
முனைவர் பழநி. அரங்கசாமி அவர்கள், மேனாள் ஆங்கிலத்துறைப் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

வெட்டிக்காடு நூல் அறிமுகம் முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

கீதா கஃபே நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்கள்

ஏற்புரை: பொறியாளர் சோ.இரவிச்சந்திரன் அவர்கள், இயக்குநர், இக்சியா தொடர்பகம், சிங்கப்பூர்
கீதா இரவிச்சந்திரன் அவர்கள் எம்.ஏ.; எம். ஃபில்.

நன்றியுரை: மருத்துவர் வி. தனபாலன் அவர்கள்
வினோதகன் மருத்துவமனை, தஞ்சாவூர்


நிகழ்ச்சி நெறியாளர்: திரு. சுரேகா சுந்தர் அவர்கள்

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துவோம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துகள்.