நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 19 ஜூன், 2016

தொல்காப்பியம் குறித்த சிறப்புரை





தொல்காப்பியம் என்னும் ஒப்புயர்வற்ற இலக்கண நூலினைக் கற்கத் தொடங்கிய நாளினை நினைத்துப்பார்கின்றேன். 1987 முதல் 1992 வரை திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் பேராசிரியர்களின் பயிற்றுவித்தலில் இந்த நூலினை அறிந்துகொள்ள முடிந்தது. அதன் பிறகு முனைவர் கு. சுந்தரமூர்த்தி ஐயாவின் உரைகளும், பொழிவுகளும் இந்த நூலின்மேல் ஈர்ப்பினை ஏற்படுத்தியது. அறிஞர் பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தல் இந்த நூலை ஆய்வுப்பொருளாக்கிக்கொள்ள அடிகோலியது. புலவர் பொ.வேல்சாமி, முனைவர் கு.சிவமணி, முனைவர் ப.பத்மநாபன் உள்ளிட்ட அறிஞர்களின் தொடர்ந்த ஊக்கமொழிகள் என்னை வரம்பிட்டு நிலைப்படுத்துகின்றன.

உலகத் தொல்காப்பிய மன்றம் என்னும் பேரமைப்பின் வழியாக உலகப் பரவலுக்கு உரிய வகையில் தொல்காப்பியத்தைப் படிக்கவும் பரப்பவும் என் முயற்சி மீள்பிறப்பு எய்தியது.

பெட்னா எனப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரமைப்பு என்னும் வளர்ப்புத்தாய் ஒரு களம் அமைத்து என்னைத் தொல்காப்பியம் குறித்து உரையாற்ற ஓர் அரிய வாய்ப்பினை வழங்கியுள்ளது.

ஆம்! இன்று 19.06.2016 இரவு தொல்காப்பியத்தின் சிறப்புகள் குறித்த என் உரை தமிழ் ஆர்வலர்களின் முன்பாக அரங்கேற்றம் காண உள்ளது. என் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டவர்கள் உலகெங்கும் பரவியுள்ளனர். இத்தகு பெருமைக்குரிய தமிழ் அன்பர்கள் என் உரையைச் செவிமடுத்து, நிறைகுறைகளைச் சுட்டி என் முயற்சியை ஊக்கப்படுத்தலாம்.


நாள்:  ஜூன் 19 (06/19/2016)
நேரம்: இரவு 8:30  ET (கிழக்கு நேரம் - ஞாயிறு மாலை 8:30-9:30)
Eastern Time 8:30 PM, i.e., California Time 5:30 PM.

By Conference Call (பல்வழி அமைப்பு):




1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்களது முயற்சிக்கு பாராட்டுகள். துணை நிற்போருக்கு மனமார்ந்த நன்றி.