நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பேராசிரியர் சா. வளவன் அவர்கள் மறைவு!

பேராசிரியர் சா. வளவன் 


சென்னைப் பச்சையப்பன் கல்லூரியின் முன்னைத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சா. வளவன் அவர்கள் இன்று (29.04.2016) மாலை 6 மணியளவில் இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அவருடன் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, உரையாடியுள்ளேன். சென்னை வானொலி நிகழ்வு ஒன்றில் அவருடன் கலந்துகொண்டுள்ளேன். நாட்டுப்புறவியல் துறையில் ஈடுபாடு கொண்டவர். பல்வேறு நூல்களையும் கட்டுரைகளையும் தமிழுக்குத் தந்தவர். அனைவரிடத்தும் நிறைந்த அன்புடன் பழகும் பண்பாளர். அன்னாரின் மறைவால் வருந்தும் தமிழுள்ளங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்!

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள்.