நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

உலகத் தொல்காப்பிய மன்றம் – புதுச்சேரிக் கிளை, தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு


பேராசிரியர் தெ.முருகசாமி அவர்களின் சிறப்புரை


உலகத் தொல்காப்பிய மன்றம் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு நிகழ்ச்சி புதுச்சேரி, செகா கலைக்கூடத்தில் 08.02.2016 அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை முனைவர் . பத்மநாபன் வரவேற்றார். முனைவர் மு.இளங்கோவன் தொடர்ப்பொழிவு குறித்த நோக்கவுரை வழங்கினார்

காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் தெ. முருகசாமி தொல்காப்பியம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொல்காப்பிய நூலின் காலம், அந்த நூலில் இடம்பெற்றுள்ள செய்திகள், தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் படிக்க வேண்டியதன் தேவையைத் தம் சொற்பொழிவில் எடுத்துரைத்தார்

செ.திருவாசகம் நன்றியுரை வழங்கினார். புதுசேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.




கருத்துகள் இல்லை: