நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 3 ஜூன், 2015

மலேசியாவில் தொல்காப்பிய மன்றம் தொடங்குவது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி


மலேசியத் தமிழ்நெறி வாழ்வியல் இயக்கத்தின் சார்பில் இன்று 03.06.2015 அறிவன்(புதன்)கிழமை இரவு எட்டு மணிக்குத் தொல்காப்பிய மன்றம் தொடங்குவது குறித்தும், இலக்கியங்கள் குறித்தும் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, புதுச்சேரியிலிருந்து வருகைதரும் முனைவர் மு.இளங்கோவன்  தொல்காப்பிய மன்றம் தொடங்குவது குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றார். இன்றைய இலக்கியப் போக்குகள் குறித்தும் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திரு. அருள்முனைவர், திரு. மாரியப்பனார் உள்ளிட்ட தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

இடம்: கிள்ளான் தாமான் பெர்க்கிலி, பெர்க்கிலி உணவக மண்டபம்

நாளும் நேரமும்: 03.06.2015, இரவு எட்டுமணி

தொடர்புக்கு:

திரு. அருள்முனைவர் 017 – 3315341
திரு. மாரியப்பனார் 012 – 3662286

மு.இளங்கோவன் – 010 - 4356866

2 கருத்துகள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நல்ல முயற்சி. தங்களின் முயற்சி பல்லாற்றானும் சிறக்க வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

முயற்சி சிறக்க நல் வாழ்த்துக்கள் ஐயா