நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 25 மார்ச், 2014

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்-தமிழ்த்துறை, இணையம் வளர்த்த தமிழ் - உரையரங்கம்


முனைவர் மு.பாண்டி அவர்கள் வரவேற்புரை

காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் இன்று(24.03.2014) காலை 10.30 முதல் மாலை 4 மணி வரை இணையம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் உரையரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பாண்டி அவர்கள் உரையரங்க நோக்கம் குறித்து உரையாற்றினார். மாணவர் வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் குருமல்லேசு பிரபு அவர்கள் மாணவர்களுக்குப் பயன்படும் இந்த உரையரங்கு, பயிற்சி குறித்து அறிமுகம் செய்தார். முனைவர் மு.இளங்கோவன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இணையம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உரையும் பயிற்சியும் வழங்கினார்.
பேராசிரியர் குருமல்லேசு பிரபு உரை

உரைகேட்கும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள்
ஆய்வாளர்கள், முதுகலை மாணவிகள்
உரையரங்கில் பங்கேற்றவர்கள்(குழுப்படம்)

கருத்துகள் இல்லை: