நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

சென்னையில் தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கம்


மதுரையில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்கமும், மைசூா், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து நடத்தும் தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கம் சென்னை,  எத்திராசு மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. தமிழ்க் கணினி, தமிழ் இணையம் குறித்து    அறிய விரும்பும் ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

  நாள் : 06.01.2014                            நேரம் : முற்பகல் 10.30 மணி

இடம் : எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை    
 
தொடக்க விழா - நிகழ்ச்சி நிரல்

நேரம் : முற்பகல் 10.30 முதல் 11.55 வரை.

தமிழ்த் தாய் வாழ்த்து.

வரவேற்புரை:    முனைவா் கா.மு.சேகா், தமிழ் வளா்ச்சி இயக்குநா், சென்னை.

கருத்தரங்க விளக்கவுரை:    முனைவா் மூ.இராசாராம்...,அவா்கள், அரசுச் செயலாளா்தமிழ் வளா்ச்சி  மற்றும் செய்தித்துறை.                                                 
கருத்தரங்கினைத் தொடங்கி வைத்துத் தலைமையேற்று விழாப்பேருரை:  
 
மாண்புமிகு கே.சி.வீரமணி அவா்கள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா்.

சிறப்புரை :   திரு.தா.கி.இராமச்சந்திரன் ..., அரசுச் செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறைசென்னை

கருத்துரை  :   
திரு. அதுல் ஆனந்த் ..., அவா்கள்  மேலாண்மை இயக்குநர்தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்), சென்னை

முனைவா் கோ.விசயராகவன், இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

முனைவா் .அருள்இயக்குநர், மொழி பெயா்ப்புப் பிரிவு,    தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை,   சென்னை.

நன்றியுரை  : முனைவர் .பசும்பொன்,  தனி அலுவலா்(பொஉலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.

கருத்தரங்க அமா்வுகள் தொடக்கம்
முதல் அமா்வு : முற்பகல் 11.55 முதல் 1.15 வரை

தலைமை     :   .திரு.வே.மா.முரளிதரன், நிருவாகக்குழுத் தலைவர், எத்திராஜ் மகளிர் கல்லூரிமற்றும் முதன்மைச் செயலாக்க அதிகாரி, குளோபல், பகவான்                  சைபா்டெக் குழு, சென்னை.

கட்டுரையாளா்கள் :

1.கணினித் தமிழ் வளா்ச்சி இன்றைய நிலை - பேரா..தெய்வசுந்தரம் சென்னை
2.கணினித் தமிழ் ஆய்வும் இணையப் பயன்பாடும் - பேரா.மா.கணேசன், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.

பிற்பகல் 1.15 முதல் 2.00 வரை உணவு இடைவேளை

இரண்டாம் அமா்வு: பிற்பகல்: 2.00 முதல் 4.00 வரை

தலைமை : பேரா..தெய்வசுந்தரம், சென்னை.

கட்டுரையாளா்கள்
1.தமிழில் பேச்சுத் தொழில்நுட்பம் - பேரா...ராமகிருட்டிணன் , இந்திய அறிவியல் கழகம், பெங்களுரு.
2.இன்றைய பயன்பாட்டுத் தமிழ் மென்பொருள்கள் - திரு.இல.சுந்தரம்,   இராமசாமி நினைவுப் பல்கலைக் கழகம், சென்னை.
3.தமிழ் இணையம் இனி அனைவருக்கும்பேரா.கிருட்டிணமூா்த்தி,   அண்ணா பல்கலைக் கழகம் (ஓய்வு), சென்னை
4.பன்மொழி எழுத்துக்களுக்கான மாற்று விசைப் பலகைதிரு.தி.வாசுதேவன்சா்மா சொலியூசன்ஸ் அண்ட் புராடக்ஸ், புதுக்கோட்டை.
5.தமிழ் அறிதியியல் – (Tamil informatics) திரு.நாக.இளங்கோவன், அறிவியல் வல்லுநர், சென்னை.

மூன்றாம் அமா்வு: பிற்பகல் 4.00 முதல் 5.00 வரை

தலைமை     :   திரு.மாஃபா.. பாண்டியராசன், நிறுவனா், மனிதவள மேம்பாட்டு அமைப்புசட்டமன்ற உறுப்பினா், விருதுநகா்.

கட்டுரையாளா்கள் :

1.தமிழ் இணையம் வளா்ச்சியும் வாய்ப்பும்- பேரா.மு.இளங்கோவன், புதுச்சேரி.
2.இணையத் தமிழ் வளர்ச்சியில் சிக்கல்களும் தீர்வுகளும்கவிஞா்.தங்க. காமராசு, சென்னை.
3.தமிழில் திறவூற்று மென்பொருள்கள் -திரு..செந்தில்குமரன், லினரோ, கேம்பிரிட்சு.

கலந்துரையாடல்  :   பங்கேற்பாளர்கள்.

நன்றியுரை    :  பேரா.சோதி குமாரவேல், முதல்வர் எத்திராசு மகளிர் கல்லூரி.


  நாட்டுப்பண்

கருத்துகள் இல்லை: