நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 27 ஜூன், 2013

முனைவர் மு.இளங்கோவனின் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் நூல்கள் வெளியீட்டு விழா






முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் எழுதிய செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவும் புதுவை மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ஆண்டிராய்டு இயங்குதளத்தில் உலகப் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்வும், தமிழ்வளர்ச்சிக்கு உதவும் புதிய இணையதளத் தொடக்க விழாவும், பாவேந்தர் நூல்களின் முதல்பதிப்புகளை மின்பதிப்பாக வெளியிடும் நிகழ்வும், புதுச்சேரி இலக்கிய வட்டத் தொடக்க விழாவும் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற உள்ளன. தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

நாள்: 03.07.2013,அறிவன்(புதன்)கிழமை, நேரம்: மாலை 6.30 – 8.00 மணி.

இடம்  :  புதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி

தமிழ்த்தாய் வாழ்த்து: பேராசிரியர் இரா.அகிலா அவர்கள்

வரவேற்பு: திரு. கு. மோகன் அவர்கள் ( புதுச்சேரி இலக்கியவட்டம்)


தலைமை மற்றும் நூல்கள் வெளியீடு:

மாண்புமிகு வ.சபாபதி(எ) கோதண்டராமன்அவர்கள்
(சட்டப்பேரவைத் தலைவர், புதுச்சேரி சட்டப்பேரவை)


நூல்களின் முதல்படி பெறுதல்:

முனைவர் வி.முத்து அவர்கள் தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்

திரு. ப. வைத்தியநாதன் அவர்கள் (உதவிப் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்)

திரு. சோழன் க.குமார் அவர்கள், சென்னை

இணையதளத்தைத் தொடங்கி வைத்தல், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஆண்டிராய்டில் அறிமுகம், பாவேந்தரின் மின்பதிப்புநூல்கள் வெளியிடல்

மாண்புமிகு தி.தியாகராசன்  அவர்கள்
 (மின்துறை, கல்வி மற்றும் கலைபண்பாட்டுத்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு)

நூல்கள் மதிப்பீட்டு உரை:  பேராசிரியர் இராச. குழந்தைவேலனார் அவர்கள்


வாழ்த்துரை

தமிழ்மாமணி திரு. மன்னர்மன்னன் அவர்கள்

முனைவர் சு.வரலட்சுமி அவர்கள் ( முதல்வர், பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரி)

முனைவர் அரங்க. பாரி அவர்கள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

நன்றியுரை: திரு. கோ. முருகன் அவர்கள் (செயலர், புதுச்சேரி இலக்கியவட்டம்)

தொகுப்புரை: முனைவர் ஆ. மணி அவர்கள் (தமிழ்த்துறை, தாகூர் கலைக் கல்லூரி) 


- நிகழ்ச்சி ஏற்பாடு:  புதுச்சேரி இலக்கிய வட்டம்


தொடர்புக்கு: 94420 29053 / 94439 27141 / 98423 30358

3 கருத்துகள்:

எஸ் சம்பத் சொன்னது…

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

கல்விக்கோயில் சொன்னது…

விழா சிறப்புடன் நடந்தேற வாழ்த்துக்கள்

ஹ ர ணி சொன்னது…

அன்பு இளங்கோவன்..

க. அன்பழகன் வணக்கமுடன்.

எப்போதும் தமிழச்சிந்தனையும் தமிழ்ச் சான்றோர்கள் பெருமையும் ஆய்வில் தனித்தகுதியும் தரமும் கொண்டு இயங்கும் உங்களின் பணிகள் என்றைக்கும் கனிச்சுவையே கரும்பே ஆகும்.

மேன்மேலும் தொடர்ந்து பல ஆக்கங்களைத் தமிழ் மொழி உங்களால் பெறவேண்டும். நெஞ்சம் நிறைந்து வாழ்த்துக்கிறேன்.