நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 22 ஜனவரி, 2013

எம்.எஸ். உதயமூர்த்தி மறைவு



 எம்.எஸ். உதயமூர்த்தி 
"மக்கள் சக்தி" இயக்கத்தின் தலைவர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் (வயது 82) சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் இளைஞர்களிடையே எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் நடத்திய இயக்கம் தன்னம்பிக்கையை விதைப்பவையாக இருந்தது. பல்வேறு தன்முன்னேற்ற நூல்களை எழுதிய எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் மருத்துவம் பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார்.

எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்தவர். தமிழ்நாட்டு இளைஞர்களை நல்வழிப்படுத்தத் தம் பணியை விடுத்துத் தமிழகம் வந்து இளைஞர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த உரையாலும், எழுத்தாலும் தொடர்ந்து களப்பணியாற்றினார். இவரின் பணியைப் பாராட்டும் வகையில் உன்னால்முடியும் தம்பி என்ற திரைப்படமும், அதில் இடம்பெறும் உதயமூர்த்தி என்ற கதைத்தலைவனும் கிடைத்தனர். இவரின் நூல்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக உள்ளன.

எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் நாகை மாவட்டம் மயிலாடுதுறை விலா நகரில் 1928 இல் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கிண்டிப் பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்தவர். இவருக்குச் சித்தார்த்தா, அசோகன் என்ற இரு மகன்களும், கமலா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.

மக்களுக்கு உழைத்த மாந்தரின் நினைவைப் போற்றுவோம். 

1 கருத்து:

தருமி சொன்னது…

அவருடைய பெரும் உழைப்புக்கு நன்றி.