நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 12 டிசம்பர், 2012

குவைத் நாட்டில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி


 குவைத் நாட்டில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சியைத் தமிழ்நாடு பொறியாளர் குழுமமும், பொங்குதமிழ் மன்றமும் திசம்பர் 14, 15 ஆகிய இரண்டுநாள் (வெள்ளி, சனி) நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்தக் கண்காட்சியில் தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் குறித்தும், தமிழ் இணையம் குறித்தும் இரண்டு உரைகள் வழங்க என்னை அழைத்துள்ளனர்

இன்று (12.12.2012) காலை சென்னையில் வானூர்தியில் புறப்பட்டு குவைத் நாட்டு நேரப்படி காலை 8. 30 மணிக்குக் குவைத் பன்னாட்டு வானூர்தி நிலையம் வந்து சேர்ந்தேன். நண்பர் தமிழ்நாடன் ஏற்பாட்டில் நண்பர் சேது அவர்கள் வானூர்தி நிலையம் வந்து வரவேற்று அழைத்துச்சென்றார்

குவைத் நாட்டின் வளம் பற்றியும், தமிழகத் தொழிலாளர்களின் நிலை பற்றியும் செவி வழி அறிந்திருந்த எனக்கு இந்த நாட்டை நேரில் காணும் வாய்ப்பு இன்று அமைந்தது. அவ்வப்பொழுது என் பட்டறிவுங்களைப் பகிர்ந்துகொள்வேன்.

குவைத் கண்காட்சிக்கு ஆர்வமுள்ள குவைத் வாழும் தோழர்கள் வந்து மகிழ்வூட்டலாம்.

குவைத்தில் தொடர்புக்கு:

திரு. தமிழ்நாடன் : 6685 2906
திரு. சேது : 65094097

கருத்துகள் இல்லை: