நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

பாவாணர் மகன் அடியார்க்குநல்லான் அருங்கலைவல்லான் மறைவு

அடியார்க்குநல்லான் அருங்கலைவல்லான்

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்களின் மூன்றாவது மகன் அடியார்க்குநல்லான் அருங்கலைவல்லான் அவர்கள் தம் 76 ஆம் அகவையில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகில் உள்ள மதியம்பட்டியில் இன்று(21.09.2012) இயற்கை எய்தினார். அன்னாரின் உடல் சேலம் அத்தம்பட்டி, அடைக்கலநகரில் உள்ள உறவினர் இல்லத்தில் தமிழ் உணர்வாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாளை(22.09.2012) காலை 11மணிக்குத் தேவாலயத்தில் இறைவழிபாடு முடிந்த பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. உலகத் தமிழ்க்கழகப் பொறுப்பாளர்கள், தமிழ் அமைப்பினர்,உறவினர்கள்,பொதுமக்கள் காலையில் இறுதிவணக்கம் செலுத்த உள்ளனர். தொடர்புக்கு: 0091- 8056462388 0091- 9791574538

1 கருத்து:

Unknown சொன்னது…

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.