நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 மே, 2011

புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் மே தின விழா


அழைப்பிதழ்

புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் இன்று(28.05.2011) காரிக்கிழமை மாலை ஆறுமணி முதல் மே தின விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

தேசிய விருதாளர் செ.ஆதவன் அனைவரையும் வரவேற்க, தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து அவர்கள் தலைமை தாங்குகின்றார். பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் நோக்கவுரையாற்ற எழுச்சித் தமிழிசையைப் புலவர் வி.திருவேங்கடம் குழுவினர் வழங்குகின்றனர்.

பாட்டரங்கில் செ.செல்வக்குமாரி, ந.இராமமூர்த்தி, கலா விசு, ஆறு. செல்வன் பாடல் படிக்கின்றனர்.

பாராட்டரங்கில் அண்மையில் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற முனைவர் கேசவ. பழனிவேலு, முனைவர் மு.இளங்கோவன் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

கடலூர் வழக்கறிஞர் வீ.அழகரசன் அவர்கள் சிறப்புரையாற்றுகின்றார்.

நல்லாசிரியர் வைத்தி கத்தூரி அவர்கள் நன்றியுரையாற்றுகின்றார்.

கருத்துகள் இல்லை: