நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

புதுச்சேரியில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா




தமிழ் மக்களைப் பகுத்தறிவுப்பாடல்கள் வழியாகவும், மொழியுணர்வுப் பாடல்கள் வழியாகவும் விழிப்புணர்வு அடையச்செய்த பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் இன்று(29.04.2011)
காலை பத்து மணியளவில் புதுச்சேரி, பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள
பாவேந்தர் அருங்காட்சியகத்தில் கொண்டாடப்படுகின்றது.

முன்னதாகப் புதுவைப் பாரதிப்பூங்காவில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்குத்
தமிழறிஞர்களும் அரசு அதிகாரிகளும்,பாவேந்தர் பற்றாளர்களும் மாலை அணிவித்துச் சிறப்பிக்கின்றனர்.பாவேந்தர் அருங்காட்சியகத்தில் உள்ள பாவேந்தர் சிலைக்குப் பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன் அவர்களும் பிற பாவேந்தர் பற்றாளர்களும் மலர்வணக்கம் செலுத்தி மகிழ்வர். பாவேந்தர் புகழ்ப்பாடல்களைப்பாடியும், பாவேந்தர் குறித்துக் கலந்துரையாடியும் மகிழ உள்ளனர்.

கருத்துகள் இல்லை: