நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா –படங்கள்


மேனாள் புதுவை அரசின் கல்வி அமைச்சர்கள் க.இலட்சுமிநாராயணன், எசு.பி.சிவக்குமார், பொறியாளர் பாலு, கோ.பாரதி உள்ளிட்டோர் பாவேந்தர் சிலைக்கு மலர் அணிவித்து வணங்குதல்

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று(29.04.20110) காலை 10 மணியளவில் புதுச்சேரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பாவேந்தரின் திருமகனார் மன்னர்மன்னன் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்கள். பாவேந்தரின் பெயரர் கோ.பாரதி அவர்கள் முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தார். புதுச்சேரி அரசின் முன்னாள் கல்வி அமைச்சர்கள் க.இலட்சுமிநாராயணன், எசு.பி.சிவக்குமார், பொறியாளர் பாலசுப்பிரமணியன், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பாவேந்தர் சிலைக்கு- படத்திற்கு மலர்தூவி வணங்கினர். சிறுவர்கள் பாவேந்தரின் இசைப்பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். பாவேந்தரின் குடும்பத்தினர், பாவேந்தர் பற்றாளர்கள் பலர் கலந்துகொண்டனர்


மேனாள் புதுவை அரசின் கல்வி அமைச்சர்கள் க.இலட்சுமிநாராயணன், எசு.பி.சிவக்குமார், பாவேந்தரின் பெயரர் கோ.பாரதி,மு.இளங்கோவன் உள்ளிட்டோர் பாவேந்தர் சிலைக்கு மலர் அணிவித்து வணங்குதல்


மேனாள் புதுவை அரசின் கல்வி அமைச்சர்கள் க.இலட்சுமிநாராயணன், சிவக்குமார் உள்ளிட்டோர் பாவேந்தர் சிலைக்கு மலர் அணிவித்து வணங்குதல்

நன்றி: படங்கள் மதி போட்டோ,புதுச்சேரி

கருத்துகள் இல்லை: