நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 8 அக்டோபர், 2010

வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுகம் நிகழ்வும்-படங்களும்


அரங்கில் முதல்வர்,கல்லூரிச்செயலர்,மு.இளங்கோவன்


ஆலங்காயம் திரு.ஜபருல்லாகான் அவர்கள் இளங்கலைத் தமிழ்ப்பட்ட வகுப்புத் தொடங்கப்பட உள்ளதை உறுதிசெய்தல்


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ் இணைய அறிமுக விழா நடைபெறுவதற்கான அழைப்பினைத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சிவராஜி அவர்கள் முன்பே மடல்வழித் தெரிவித்தார்.30.09.2010 இல் நடத்த முதலில் திட்டமிட்டோம்.அன்று நாடு முழுவதும் 144 தடை ஆணை இருந்ததால் எங்கள் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 07.10.2010 அன்று நாடத்தலாம் என்று உறுதிசெய்தோம். அதன்படி காலை 10.30 மணிக்குப் பயிலரங்கம் இனிதே தொடங்கியது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் ப.நசுருல்லா அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது. கல்லூரிச் செயலாளர் ஜனாப் சு.கெய்சர் அகமது அவர்கள் முன்னிலையுரையாற்றினார்.தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ப.சிவராஜி அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். பயிலரங்கத் தொடக்கத்தில் நூற்றாண்டுப் பழைமையுடைய இக்கல்லூரியில் பணியாற்றியவர்கள் பலரும் உலக அளவில் புகழ்பெற்ற பேராசியர்களாக விளங்கியதையும்,இக்கல்லூரியில் பயின்றவர்கள் உலக அளவில் புகழ்பெற்றவர்களாக விளங்குவதையும் எடுத்துரைத்து இக்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயிலுவதற்கு உரியவகையில் இக்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் வகுப்பைத் தொடங்க வேண்டும் என்று பணிவுடன் ஒரு வேண்டுகோளை வைத்தார்.

கல்லூரியின் முதல்வரும்,கல்லூரியின் துணைச்செயலும் கூடியிருந்த அவையில் இக்கோரிக்கை வைக்கப்பட்டதும் கல்லூரியின் துணைச்செயலர் ஆலங்காயம் திரு.ஜபருல்லாகான் அவர்கள் மேடையில் தோன்றி அடுத்த ஆண்டு முதல் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ்ப் பட்ட வகுப்பு தொடங்கப்படும் என்ற அறிவிப்பைச் செய்தார்கள்.அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்ற தமிழ்த்துறையினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

பின்னர் ‘தமிழும் இணையமும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய மு.இளங்கோவன் தமிழ் இணையத்தின் வளர்ச்சி,வாய்ப்புகளைச் செய்முறை வழியாக எடுத்துரைத்தார்.

முதுகலை வேதியியல்துறையில் பயிலும் எசு.சுல்தானுதீன் நன்றியுரையாற்றினார்.

கல்லூரி மாணவர்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு தமிழ் இணைய அறிவுபெற்றனர். இணையத் தமிழன்பர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


கல்லூரி முதல்வர் பேராசிரியர் ப.நசுருல்லா


கல்லூரித் துணைச்செயலாளர் ஆலங்காயம் திரு.ஜபருல்லாகான் அவர்கள்


பேராசிரியர் சிவராஜி அறிமுக உரை


வினாக்களை எழுப்பி ஐயம் போக்கிக்கொள்ளும் மாணவர்கள்


இளங்கலைத் தமிழ்ப் பட்ட வகுப்பு வர உள்ளதைக் கொண்டாடும் பேராசிரியர்கள்


மு.இளங்கோவன்


அரங்கு நிறைந்த மாணவர்கள்


நன்றியுரை

கருத்துகள் இல்லை: