நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 23 செப்டம்பர், 2010

பேராசிரியர் இரா.இராசவேலு அவர்களின் இமயம் தொடும் இசைப்பறவை நூல் வெளியீட்டு விழா

புதுவைப் பேராசிரியர் இரா.இராசவேலு அவர்கள் எழுதிய இமயம் தொடும் இசைப்பறவை என்னும் மரபுப்பாடல் நூல் வெளியீட்டு விழா இன்று புதுச்சேரியில் நடைபெறுகிறது.முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் தலைமையில் நடைபெறும் விழாவில் புதுவை அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான் அவர்கள் நூலை வெளியிடுகின்றார்.பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள் நூல் திறனாய்வு செய்கின்றார்.முனைவர் பாபுராவ்,அமைச்சர் ஆ.நமச்சிவாயம்,பாவலர் இலக்கியன்,நல்லாசிரியர் க.சீத்தாராமன்,ஈகியர் மு.அப்துல் மஜீத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கின்றனர்.

இடம்: செயராம் உணவுகம்,புதுச்சேரி
நாள் 23.09.2010
நேரம்: மாலை 6 மணி

கருத்துகள் இல்லை: