நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 26 ஜனவரி, 2010

புதுச்சேரியில் ஈழத்து எழுத்தாளருடன் சந்திப்பு...

புதுச்சேரி இலக்கியம் கலை இலக்கிய நூல் விற்பனையகத்தில் மலையகத் தமிழர், எழுத்தாளர், "கொழுந்து" திங்களிதழ் ஆசிரியர் அந்தனி சீவா அவர்கள் "ஈழ இலக்கியம் ஒரு பார்வை" என்ற தலைப்பில் சிறப்புரையும் கலந்துரையாடலும் நிகழ்த்த உள்ளார்.எழுத்தாளர் சூரியதீபன் (பா.செயப்பிரகாசம்)அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் பாவலர் சீனு.தமிழ்மணி அவர்கள் வரவேற்புரையும் கலை இலக்கியப் பெருமன்றப் பொறுப்பாளர் மு.சி.இரா அவர்கள் நன்றியுரையும் ஆற்றுகின்றனர். அனைவரையும் இலக்கியம் அமைப்பு வரவேற்கிறது.

நாள்: 26.01.2010
நேரம்: சரியாக மாலை 06.00 மணி
இடம்: இலக்கியம்,141,மேல்மாடி,இலெனின் வீதி,குயவர்பாளையம்,புதுச்சேரி.

தொடர்புக்கு : பாவலர் சீனு.தமிழ்மணி +91 9443622366

கருத்துகள் இல்லை: