நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 19 ஜனவரி, 2010

புதுவையில் பிரஞ்சு இந்திய கலை பண்பாட்டு விழா

பிரஞ்சு இந்திய கலை பண்பாட்டு விழா இன்று(19.01.2010) புதுச்சேரியில் நடைபெற்றது.புதுச்சேரி கடற்கரையில் மக்கள் குழுமியிருந்த மாலை நேரத்தில் பிரஞ்சுநாட்டுக் கலைக்குழுவினரும் இந்திய நாட்டுக்கலைக்குழுவினரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்கினர்.

27 அடி உயரமுள்ள 9 ஒட்டகச்சிவிங்கி வேடம் அணிந்து பார்ப்பவரை மகிழ்ச்சிபடுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

தேவதை போல் வேடம் அணிந்த பெண் கலைஞர் இனிமையான பாடலைப் பாடினார்.எங்களுக்கு மொழி தெரியவில்லை.என்றாலும் கடற்காற்றில் நடுங்கி ஊ ஊ ஊ ஊ ஊ ஊ என்று ஓசை எழுப்பியதுபோல் பாடல் இருந்தது.பின்புலமாக ஒரு சூறைக்காற்று வீசுவதுபோல் பின்புலம் உருவாக்கப்பட்டது.ஆண் கலைஞர் ஒருவர் டிரம்சு என்ற பெரிய இசைக்கருவியை இசைத்து முழக்கினார்.இவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம்பெயர சக்கர உருளைகள் பொருத்தப்பட்ட இயங்கு கருவிகளில் இயங்கினர். ஒளியமைப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது.இடையிடையே வானவேடிக்கைள் நடந்தன.பன்னாட்டு மக்களின் சங்கமமாக மக்கள் நிறைந்து பார்த்துச் சுவைத்தனர்.

மக்கள் கூட்டம் நிறைந்திருந்த கடற்கரையில் நடந்ததால் உள்ளூர் மக்களும் வெளிநாட்டினரும் வெளியூர் சுற்றுலாக்காரர்களும் கண்டு களித்தனர்.நானும் என் மக்களுடன் சென்று அவர்களுக்கு இந்த வேடிக்கைக்காட்சிகளைக் காட்டி அழைத்து வந்தேன்.


கலைநிகழ்ச்சி-படங்கள்


கலைநிகழ்ச்சி-படங்கள்


கலைநிகழ்ச்சி-படங்கள்


கலைநிகழ்ச்சி-படங்கள்


கலைநிகழ்ச்சி-படங்கள்


கலைநிகழ்ச்சி-படங்கள்


கலைநிகழ்ச்சி-படங்கள்


கலைநிகழ்ச்சி-படங்கள்



கலைநிகழ்ச்சி-படங்கள்

1 கருத்து:

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

வணக்கம் முனைவர் ஐயா அவர்களே! நிகழ்ச்சி குறித்த வர்ணனையும்,புகைப்படங்களும் அழகு.பிரஞ்சு ஆதிக்கத்தின் தாக்கம் இன்றும் புதுச்சேரியில் இருக்கிறதா ஐயா!
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்