நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 20 மார்ச், 2009

பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கணினி,இணையத்தமிழ்த் தேசியக்கருத்தரங்கு


பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முகப்பு

பெரம்பலூரில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் தமிழ் இணையம் சார்ந்ததேசியக்கருத்தரங்கம் இன்று(20.03.2009) காலை 11.00மணிக்குத் தொடங்கியது.முனைவர் நா.சானகிராமன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.கல்லூரி இயக்குநர் முனைவர் ம.நல்லு அவர்கள் தலைமை தாங்கினார்.சென்னை மாநிலக் கல்லூரி
இணைப்பேராசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் முன்னிலையுரை யாற்றினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகக் கணினி மென்பொருள் பூங்கா இயக்குநர் முனைவர் கோபிநாத்கணபதி அவர்கள் கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.


ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூல்

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கருத்தரங்கக் கட்டுரைகள் பற்றிய மதிப்பீட்டை வழங்கினார்.கருத்தரங்க மலரில் வெளியிடப்பட்டுள்ள 30 கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள தமிழ்த்தட்டச்சு,வலைப்பூ உருவாக்கம்,தமிழ் இணையத்தின் சிறப்பு,உலகு தழுவிய தமிழ் இணைய முயற்சிகள்
பற்றி எடுத்துரைத்தார்.

கல்லூரி விரிவுரையாளர் அ.கோபிநாத் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு 2,30 மணிக்கு மீண்டும் அமர்வு தொடங்கியது.
நால்வர் கட்டுரை படித்தனர்.முதல் அமர்வின் நிறைவில் மு.இளங்கோவனின் தமிழும் இணையமும் என்ற பொருளில்உரை அமைந்தது.இணைய இணைப்பு சரியாக கிடைக்காததாலும் கணிப்பொறி ஒத்துழைக்க மறுத்ததாலும் திட்டமிட்டு உரையாற்ற
நினைத்தும் முழுமையாக வெளிப்படுத்த இயலாமல் போனது.எனினும் குறைந்த அளவு வசதிகளைக் கொண்டு மாணவர்களுக்குப் பயன்படும் பல தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டன.
பல்வேறு இணையத்தளங்கள் பார்வைக்கு உட்படுத்தப்பட்டன.

சென்னை,விருத்தாசலம்,பெரம்பலூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்ந்த பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணையம் பற்றி அறிந்தனர்.


அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்


மு.இ.உரையாற்றுதல்


பயிற்சியில் மு.இ


முனைவர் கோபிநாத் சிறப்பிக்கப்படுதல்


மு.இ. சிறப்பிக்கப்படுதல்


தமிழ்மணம் வரவேற்புப் பதாகை

1 கருத்து:

செல்வமுரளி சொன்னது…

மிக்க மகிழ்ச்சி அய்யா!
தங்கள் தமிழ்ப்பணி இனிதே தொடரட்டும்!!!

என்றும் அன்புடன்
செல்வமுரளி
http://tamilvanigam.in