நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 22 ஜனவரி, 2009

முதலாவது பன்னாட்டுச் செவ்வியல்மொழி மாநாடு-கருத்தரங்கம்

திருச்செங்கோடு கே.எசு.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வரும் 2009 ஏப்பிரல் மாதம்25,26 இருநாள் நடைபெற உள்ளது.கருத்தரங்கின் மையப்பொருள் செவ்வியல் - மொழிகள், இலக்கணங்கள், இலக்கியங்கள் என்பதாகும்.கருத்தரங்கில் படிக்கத் தக்க கட்டுரையைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஐந்து முதல் பத்துப் பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சில் அனுப்பவேண்டும்.

பதிவுக்கட்டணம் பேராசிரியர்கள் 300-00 உருவா.ஆய்வுமாணவர்கள் 200-00 உருவா.

THE PRINCIPAL,K.S.R.COLLEGE OF ARTS AND SCIENCE,TIRUCHENGODE என்ற பெயருக்கு வரைவோலை அமைதல்வேண்டும்

பங்கேற்பாளர்கள் 25.02.2009 நாளுக்குள் பணம்,கட்டுரை அனுப்பிவைக்கவேண்டும்.

தொடர்பு முகவரி:

முனைவர் இரா.சந்திரசேகரன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
கே.எசு.ஆர்.கலை,அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு-637215
தமிழிநாடு,இந்தியா

என்னும் முகவரியில் தொடர்புகொள்ளலாம்

செல்பேசி :+91 9443551701
மின்னஞ்சல் : tamilchandru@yahoo.com

மேலும் விவரங்களுக்கு,அழைப்பிதழுக்குக் கல்லூரியின் வலைப்பூவைக் காண்க!

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ஐயா,
வணக்கம்.
எங்கள் கல்லூரியின் கருத்தரங்க அறிவிப்பை தங்கள் வலைப்பதிவில் வெளியிட்டமைக்கு நன்றிகள்.........

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

பயனுள்ள செய்தி