நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 3 நவம்பர், 2008

புதுச்சேரியில் பாவேந்தர் இல்லத் திருமணம்...


அழைப்பிதழ்

பாவேந்தரின் இளையமகள் இரமணி அவர்களின் பெயரன் பொறிஞர் ச.கு.முகிலன்(பெற்றோர் திரு.சபா.குப்புசாமி,பாவலர் மணிமேகலை குப்புசாமி)-சு.இரேகா(பெற்றோர் ந.சுப்பிரமணி யன்-உமாமகேசுவரி) ஆகியோரின் திருமணம் புதுச்சேரி ஆனந்தா திருமண மண்டபத்தில் 03.11.2008 திங்கள் கிழமை காலை நடைபெறுகிறது.

இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி 02.11.2008 ஞாயிறு மாலை ஆனந்தா திருமண மண்டபத்தில் நிகழ்வுற்றது.புதுச்சேரியில் வாழும் தமிழறிஞர்களும் தமிழகத்தின் பல பகுதிகளைச் சார்ந்த தமிழ் மொழி,இன உணர்வாளர்களும் பெருந்திரளாக வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மக்கள் இசைக்குழுவைச் சார்ந்த புதுவை திரு.செயமூர்த்தி அவர்களின் இன்னிசை அனைவரையும் ஈர்த்தது.பாவேந்தரின் பாடல்கள்,பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்,உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் பாடல்களைப் பாடித் தமிழ் உணர்ச்சியூட்டி அவையினரை மகிழ்ச்சிப்படுத்தினார்.தமிழ் உணர்வுடன் பாடிவரும் செயமூர்த்தி உலகத் தமிழர்களால் வளர்க்கப்பட வேண்டிய கலைஞர்.


புதுவை செயமூர்த்தி தமிழிசை வழங்குகிறார்


புதுவை செயமூர்த்தி இன்னிசை வழங்குகிறார்


புதுவை செயமூர்த்தி குழுவினருடன்

காலையில் நடைபெற உள்ள திருமணத்தில் பெரியாரியல் அறிஞர் தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் தலைமை தாங்குகிறார்.புதுச்சேரி அரசின் முன்னாள் முதலமைச்சர் திருநிறை ந.அரங்கசாமி அவர்கள் முன்னிலை வகிக்கிறார்.முனைவர் இரா.திருமுருகனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.தனித்தமிழ்க்கழகம் சார்ந்த அன்பர்கள் திருமணத்திற்கு வருகை தருபவர்களை அன்புடன் வரவேற்கின்றனர்.

திருமண அழைப்பிதழ் புதுமையாக அச்சிடப்பட்டிருந்தது. பாவேந்தரின் குடும்பவிளக்கு நூல் அழகுடன் அச்சிடப்பட்டு அதில் அழைப்பிதழ் இணைக்கப்பெற்று அனைவருக்கும் வழங்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: