நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 13 அக்டோபர், 2008

உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடர்கிறது...

மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப்பயிலரங்கம் காலையில் தொடங்கி சிறப்புடன் நடைபெற்று வருகிறது.கல்லூரி முதல்வர் முனைவர் கி.வெள்ளியங்கிரி வரவேற்றார்.கல்லூரித்தலைவர் திரு சு.பழனியாண்டி தலைமையுரை யாற்றினார்.வழக்கறிஞர் ஏ.பி.காமராசன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.முனைவர் மு.இளங்கோவன் தமிழில் தட்டச்சு,தமிழ் இதழ்கள்,தமிழ் இணைய முன்னோடிகள் பற்றி செயல்விளக்கம் தந்தார்.

பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கு நடைபெறுகிறது.முகுந்தராசு வலைப்பூ சிறப்புகள் பற்றி உரையாற்றிக்கொண்டுள்ளார்.வரியுருமா,ஒலி இணைப்புகள் பற்றி பிற்பகல் நிகழ்வு தொடரும்...

செல்வமுரளி,யுவராசு,சபரி உரையாற்ற உள்ளனர்.

கருத்துகள் இல்லை: