நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 31 அக்டோபர், 2008

புதுச்சேரியில் விடுதலை வீரர் சீனுவாசன்-தனலட்சுமி அறக்கட்டளை நான்காம் சொற்பொழிவு

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பெற்றுள்ள விடுதலை வீரர் சீனுவாசன்-தனலட்சுமி அறக்கட்டளையின் நான்காம் சொற்பொழிவு வரும் காரி (சனி)க்கிழமை(01.11.2008) காலை பத்து மணிமுதல் ஒரு மணி வரை புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற உள்ளது.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் மு.சுதர்சன் அவர்கள் அனைவரையும் வரவேற்கவும்,சீனு திருமுகம் அவர்கள் தலைமையேற்கவும் உள்ளனர்.அறக்கட்டளை குறித்தும் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றும் விருந்தினர் குறித்தும் திரு.சீனு.தமிழ்மணி அவர்கள் அறிமுகவுரையாற்ற உள்ளார்.திருவாளர்கள் சீனு.திருஞானம்,சீனு.சம்பந்தன் முன்னிலையில் இச்சொற்பொழிவு நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை,மன்னம்பந்தல் அ.வ.அ.கல்லூரிப் பேராசிரியர் முனைவர் த.செயராமன் அவர்கள் தமிழர் வரலாறு: திரிபுகளும் புறக்கணிப்புகளும் என்னும் பொருளில் அறக்கட்டளைச் சிறப்புச் சொற்பொழிவாற்ற உள்ளார்.

புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

கருத்துகள் இல்லை: