நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 6 அக்டோபர், 2007

இசைக்குத் தனிப் பல்கலைக்கழகம்-கலைஞர் அறிவிப்பு

தமிழ்மொழி இயல் இசை நாடகம் என மூன்றாகப் பகுத்துக் காட்டப்படுவது உண்டு. இம்மூன்றையும் கற்றவர்களே தமிழை முழுமையாகக் கற்றவர்கள்.'தமிழ் முழுதறிந்த தன்மையன்' எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுவது இதனையேயாகும். அந்த அளவு தமிழ்மொழி வளம்பெற்ற மொழி. தமிழுக்கெனத் தனிப் பல்கலைக்கழகம் இருப்பதை நாம் அறிவோம். தமிழின் ஒரு கூறாக விளங்கும் இசைத்தமிழை வளர்க்க, ஆராய்ச்சி செய்ய கட்டாயம் ஒரு பல்கலைக்கழகம் இருப்பது நன்றே.

இதனை உணர்ந்து கலைஞர் அவர்கள் இன்று(06.10.07) உளியின் ஓசை திரைப்படத் தொடக்கவிழாவில் இசைக்குப் பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இசை தொடர்பான பல ஆய்வுகள் நடைபெற வாய்ப்பு உண்டு.என்றாலும் தமிழிசைக்கு இப்பல்கலைக்கழகம் முதன்மையிடம் அளிக்கும் என நம்புவோம்.

மிடற்று இசை, கருவிஇசை,பண்ணிசை, நாட்டுப்புறவிசை திரையிசை என விரிந்து கிடக்கும் இசைவளர்ச்சிக்கு,ஆராய்ச்சிக்கு, இப்பல்கலைக்கழகம் திறக்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைவிடத் தகுதியான ஒருவர் உலகில் இல்லை.

கலைஞர் ஆட்சியில் பூம்புகார், வள்ளுவர்கோட்டம், திருவள்ளுவர்சிலை முதலான தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல்கள் நடைபெற்றது போல் இசைப் பல்கலைக்கழகம் உருவாகட்டும். அது தமிழிசைக்கு ஆக்கமாக அமையட்டும்.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

கருத்துகள் இல்லை: