நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 29 ஆகஸ்ட், 2007

வே.ஆனைமுத்து ஐயா அவர்களுக்குப் பாராட்டு விழா


தந்தை பெரியார் எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்திய கருத்துகளைத் தொகுத்தும், வகைப்படுத்தியும் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக வெளிப்படுத்தியவரும் இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையை நன்கு புரிந்துகொண்டு வெளிப்படுத்தி வருபவருமான தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் பணியையும், தொண்டையும் பாராட்டும் வகையில் சென்னையில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் பாராட்டுவிழா நடைபெற உள்ளது.

இடம்: வாணிமகால்,தியாகராயர் நகர்,சென்னை

நாள்: 01.09.2007 நேரம்: காலை 10.00 மணி

தலைமை: திரு.கோ.க.மணி

வரவேற்பு: திரு.செ.குரு

பாராட்டுரை:

தோழர் ஆர்.நல்லகண்ணு,

நடுவண் அரசின் சட்டம், நீதித்துறையின் இணையமைச்சர் திரு.க.வேங்கடபதி

திரு.பழ.நெடுமாறன், திரு.தொல்.திருமாவளவன், முனைவர் பொற்கோ, திரு.கொளத்தூர் தா.செ.மணி, தோழர் சங்கமித்ரா, தோழர் க.முகிலன்,தோழர் து.தில்லைவனம், தோழர் இரா. பச்சமலை, தோழியர் கோ.வி.இராமலிங்கம், புலவர் செந்தலை ந.கவுதமன்

பாராட்டுப் பேருரை

மருத்துவர் ச.இராமதாசு
நிறுவனர்-பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை

ஏற்புரை
தோழர் வே.ஆனைமுத்து

அனைவரையும் அழைத்து மகிழும்

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையினர்
சென்னை

செய்தி
மு.இளங்கோவன்

கருத்துகள் இல்லை: