நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 15 மார்ச், 2007

பன்னாட்டுக்கருத்தரங்கு

தமிழர் அலைவு உழல்வு(Tamil Diaspora) பன்னாட்டுக்கருத்தரங்கம்-புதுச்சேரி
புதுச்சேரி பிரஞ்சு நிறுவனமும் சென்னைப்பல்கலைக்கழகமும் இணைந்து தமிழர் அலைவு உழல்வு குறித்த கருத்தரங்கை 14,15,16-03-07 நாள்களில் நடத்தின. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு ஆய்வுரைகளை வழங்கினர்.சங்க காலம் தொடங்கி இக்காலம்வரை தமிழர்களின் இடப்பெயர்வுக்கான காரணங்கள்,அதனால் பண்பாடு,வாழ்க்கைமுறைகளில் ஏற்பட்ட மாறுதல்கள் ஆராயப்பட்டன.அகதிகள் இந்தியாவில் நடத்தப்படும் முறைகள் விளக்கப்பட்டன.இணையம் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எந்த வகையில் உதவுகின்றது என்பது ஆராயப்பட்டது.புலம்பெயர்ந்தோரின் நாடக முயற்சி,இலக்கியப்படைப்புகள்(கவிதை,புதினம்)மதிப்பீடு செய்யப்பட்டன.அறிஞர்களும்,ஆய்வுமாணவர்களும் மிகுதியாகக்கலந்துகொண்டு பயன்பெற்றனர். முனைவர் மெளனகுரு,யோகராசா,சித்திரலேகா,மார்க்சு,சண்முகம்,கலாம்,சாக்கோப்சன்,மங்கை,உமாசங்கரி,சீனிவாசன் உள்ளிட்ட அறிஞர்கள் கட்டுரை படித்தனர்.முனைவர்குரோ,முனைவர் அரசு,கண்ணன் முயற்சியால் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.செய்தி-மு.இளங்கோவன்,புதுச்சேரி பேசி-9442029053

கருத்துகள் இல்லை: